×

கடையம் அருகே மாயமான மூதாட்டி உடல் ராமநதி ஆற்றில் மீட்பு

கடையம், அக்.31: கடையம் அருகே காணாமல் போன மூதாட்டி உடல் அழுகிய நிலையில் ராமநதி ஆற்றில் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையம் அருகே ரவணசமுத்திரம் குயவர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி பாத்திமா பீவி (79). கணவர் இறந்துவிட்டதால் மகன் அசன் முகைதீன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 25ம்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாத்திமா பீவி மாயமானதால் கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.  இந்நிலையில் நேற்று மாலை ரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப்பாலத்தின் அடியில்  முட்புதரில் மூதாட்டி ஒருவர் அழுகிய நிலையில்  கிடப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அழுகிய நிலையில் கிடந்தது காணாமல் போன பாத்திமா பீவி தான் என்பது தெரியவந்தது. போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Recovery ,stall ,Ramanadi River ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...