பெரம்பலூர், அக்.31: பெரம்பலூரில் தனியார் வேலை வாய்ப்புமுகாம் நாளை (1ம் தேதி) நடக்கிறது என்று கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார்த்துறை நிறுவனங்களும் - தனியார்த்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்புமுகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (1ம்தேதி) நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவை யான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப் பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்த் துறை நிறுவனங்கள் கல ந்து கொள்ளவதால் இம்முகாமிற்கு 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். எனவே இப்பணி யிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை ( 1ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.