×

தொடர் மழை காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் நிரம்பி வழியும் 4 ஏரிகள்

துறையூர், அக்.31: தொடர் மழை காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் 4 ஏரிகள் நிரம்பி வழிந்து வருகின்றன. துறையூரை அடுத்து அமைந்துள்ள புளியஞ்சோலை ஆற்றில் தொடர் மழை காரணமாக அதன் அருகில் இருக்கும் ஜம்பேரி, ஆலத்துடையன்பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி, சிறுநாவலூர் ஏரி ஆகிய நான்கு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 2, 3 ஆண்டுகளாகவே மழை இல்லாமல் பொய்த்து போனதால் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மன உளைச்சலில் இருந்து வந்தனர். தற்போது சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விவசாய பணியை ஆரம்பித்து உள்ளனர். கிணற்று பகுதியும் நிரம்பி உள்ளதால் கிணற்றுப் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி உள்ளனர்.

Tags : lakes ,tamarind river ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!