திருச்சி. அக்.31: வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோருக்கான 2வது குறைதீர் கூட்டம் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி வருமான வரித்துறை தலைமை ஆணையர் ராஜூவிஜய் நாபர் தலைமை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பீர்மொய்தீன், வருமான வரித்துறை அலுவலர் விமலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் 20 பேர் பங்கேற்றனர். மூத்த குடிமகன் ஒருவர் ஓய்வூதியர்களுக்கான வருமான வரி விதிப்பு தொடர்பாக சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். மற்றவர்கள் தங்களுக்கான ரிட்டர்ன் தொகை இன்னும் வரவில்லை என தங்களது குறைகளை தெரிவித்தனர். முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக அப்பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என ஆணையர் ராஜூவிஜய் நாபர் தெரிவித்தார்.