×

தாயார் ஊஞ்சல் உற்சவம் நவ.2 முதல் 8ம் தேதி வரை கால நிர்ணயம் அறிவிப்பு

திருச்சி, அக்.31: திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவ.2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரங்கநாச்சியார் (தாயார்) ஊஞ்சல் திருநாள் (டோலோத்ஸவம்) நடைபெறவிருக்கிறது. தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி திருவாராதனை பூஜை நடந்த பின்னர் ஊஞ்சல் கண்டருள்வது சிறப்பாகும். இத்திருவிழாவுக்கான கால நிர்ணய விவரத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தாயார் சன்னதியில் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து தினசரி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்வார். 7 மணிக்கு ஊஞ்சல் ஆரம்பித்து 8 மணிக்கு முடியும்.
மண்டபத்திலிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சேர்வார். நவ.8ம் தேதி மட்டும் படிப்பு கண்டருளி 9.30 மணிக்கு மூலஸ்தானம் சேர்வார். இந்த நாட்களில் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தானம் சேவை கிடையாது.

Tags : Mother Swing Festival Announces Deadline ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி