×

திருச்சி மாவட்டத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

திருச்சி, அக்.31: திருச்சி மாவட்டத்தில் நவ.1ம் தேதி (நாளை) வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது திருச்சி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஒரு தாலுகாவில் ஒரு கிராமம் தேர்வு செய்து அங்கு சிறப்பு முகாம் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் 11 தாலுகாக்களில் 11 கிராமங்களில் இம்முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் பல்வேறு சமூகநலத்திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், சான்றுகள், பட்டா, சிட்டா போன்ற பிரச்னைகள் குறித்து தீர்வு காணப்படும். அதன்படி நவம்பர்.1ம் தேதி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு தாலுகாவில் அரியமங்கலம், திருச்சி மேற்கில் தாமலவாரூபயம், திருவெறும்பூரில் திருவெறும்பூர், ரங்கம் பெரியகருப்பூர், மணப்பாறை செட்டிசமுத்திரம், மருங்காபுரி டி.இடையப்பட்டி, லால்குடி ரெட்டிமாங்குடி, மண்ணச்சநல்லூர் திருப்பட்டூர், முசிறி சுக்காம்பட்டி, துறையூர் கீரம்பூர், தொட்டியம் காடுவெட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. மக்கள் பங்கேற்று பயனடைய கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : grievance camp ,district ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...