×

112வது தேவர் ஜெயந்தி குருபூஜை கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, அக்.31: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (112வது பிறந்தநாள்) ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்எல்ஏ., கே.என்.நேரு தலைமையில், நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, மாவட்ட நிர்வாகிகள் குடமுருட்டி சேகர், ஆனந்த், பகுதி செயலாளர்கள் மதிவாணன், கண்ணன், மண்டி சேகர், பாலமுருகன், ராம்குமார் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைப்பு செயலாளர் பரஞ்ஜோதி, துணை செயலாளர் அருள்ஜோதி, வக்கீல் ராஜ்குமார், சகாதேவபாண்டியன், கண்ணதாசன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் டாக்டர் ரொகையா மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில், தலைமை நிலைய செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் மாலை அணிவித்தனர். தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தங்கராஜைய்யன் தலைமையில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல பல்வேறு கட்சியினர், அமைப்பினர், சங்கத்தினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Deva Jayanti Kurupuja ,party ,
× RELATED காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!!