×

8 பேர் காயம் சிவகாசி மக்கள் அவதி பந்தல்குடி, திருச்சுழி ரோடு பகுதியில் புதிதாக போர்வெல் அமைக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை, அக். 31:அருப்புக்கோட்டையில் பந்தல்குடி ரோடு, திருச்சுழி ரோடு பகுதியில் புதாதாக போர்வெல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளான பந்தல்குடி ரோடு, திருச்சுழி ரோடு, பழைய பேருந்து நிலைய ரோடு, சொக்கலிங்கபுரம், வெள்ளைக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் வீடுகளில் யாராவது இறந்தால் நீர்மாலை காரியத்திற்கு தண்ணீர் எடுப்பதற்காக திருச்சுழி ரோட்டில் அரசமரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தெப்பக்குளத்திற்கு வந்து தண்ணீர் எடுத்து செல்வர். தற்போது தெப்பத்தில் தண்ணீர் இல்லாததாலும், பாசிபடர்ந்து இருப்பதாலும் தெப்பக்குளத்தில் தண்ணீர் எடுப்பதில்லை.  தெப்பக்குளம் அருகில் நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட அடிகுழாய் மற்றும் மினிபவர் பம்ப்களின் மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர்.

தற்போது அந்த அடிகுழாய் மற்றும் மினிபவர் பம்பில் தண்ணீர் இல்லை. குறைந்த அடியில் மினிபவர் பம்ப் அமைப்பதால் அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே தண்ணீர் இல்லாமல் போனது. அடிகுழாயில் வேர் அடைத்து இருப்பதால் சரிவர தண்ணீர் வரவில்லை. இதனால் நீர்மாலைக்கு வருபவர்கள் தண்ணீர் விலைகொடுத்து வாங்கவேண்டி உள்ளது. பழுது பார்க்க நகராட்சியில் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் தெப்பக்குளம் அருகே அரசமரம் விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோயிலுக்கு சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை போன்ற தினங்களிலும் மற்ற நாட்களிலும் பெண்கள் அதிகாலையில் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி வருகின்றனர். ஆனால் அடிகுழாய் மினிபவர் பம்ப் பழுதானதால் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.வீடுகளே இல்லாத இடங்களில் நகராட்சி மூலம் மினிபவர் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களுக்கு உபயோகமாக உள்ள இங்கு அடிகுழாயை பராமரிக்கவும், புதிதாக போர்வெல் அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : borewell ,Sivakasi ,area ,Trichy Road ,Avadi Pandalgudi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து