×

சாத்தூரில் 112வது தேவர் ஜெயந்தி அனைத்து கட்சினர் தேவர் சிலைக்கு மாலை

சாத்தூர், அக். 31:சாத்தூரில் 112வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் அன்னதானம் வழங்கினார். சாத்தூரில் முத்துராமலிங்கதேவர் 112வது ஜெயந்தி மற்றும் 57வது குருபூஜையை முன்னிட்டு சமுதாயதலைவர் முருகேசன் தலைமையில் இளைஞர்கள் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். திமுக சார்பில் நகர செயலாளர் குருசாமி, காங்கிரஸ் நகர செயலாளர் கருப்பசாமி, திமக நகர செயலாளர் ஐயப்பன் ஆகியோர் சாத்தூரில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அண்ணாநகர், முக்குராந்தல் பகுதிகளில்  அன்னதானத்தை தொடங்கி வைத்தார். உடன் நகரச் செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மாலை : தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதற்காக நேற்று காலை திருவில்லிபுத்தூர் மேல ரத வீதியில் உள்ள தேவர் சிலைக்கு வந்து அங்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.  அவருடன் கட்சி நிர்வாகிகள் மீரா தனலட்சுமி முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அங்குராஜ் மற்றும் நடராஜன், முருகன், வக்கீல் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thevar Jayanti ,Sattur ,Goddess ,
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...