×

தற்கொலை செய்ய ராமேஸ்வரம் வந்த மூதாட்டி

ராமேஸ்வரம், அக். 31:  கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள ராமேஸ்வரம் வந்த 80 வயது மூதாட்டியை போலீசார் காப்பாற்றி முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள மனப்பத்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி தையல்நாயகி(80). இவர்களுககு 3 மகள், ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய தையல்நாயகி கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான அலுவலகத்திற்கு சென்றவர் தான் அணிந்திருந்த தங்க செயின், தோடு போன்றவற்றை கோயிலுக்கு தானம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

வயதான பெண் தனியாக வந்து கோயிலுக்கு நன்கொடை கொடுப்பதாக கூறியதால், சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள் போலீசாருககு தகவல் தெரிவித்தனர். ராமேஸ்வரம் கோயில் போலீசார் தையல்நாயகியிடம் விசாரணை செய்தபோது, வீட்டில் பிரச்னையினால் ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்த ஆதார் அடையாள அட்டையின் மூலம் அவரது முகவரியை தெரிந்து கொண்ட போலீசார் திருச்சி போலீசார் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வாட்ஸ் அப்பிலும் இவரது படத்துடன் இவர் குறித்து தகவல் பதிவு செய்த போலீசார் ராமேஸ்வரம் சுடுகாட்டம்பட்டியிலுள்ள தனியார் முதியோர் இல்லத்தில் தையல்நாயகியை தங்க வைத்துள்ளனர்.

Tags : brother ,Rameshwaram ,suicide ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...