×

அக்.30ஐ விடுமுறை தினமாக அரசு அறிவிக்க வேண்டும் பசும்பொன் முன்னேற்ற கழக மாநில தலைவர் மூர்த்தி தேவர் பேட்டி

சாயல்குடி, அக்.31:  தேவர் குருபூஜை தினமான அக்.30ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக மாநில தலைவர் மூர்த்தி தேவர் தெரிவித்தார்.
  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக மாநில தலைவர் மூர்த்தி தேவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: முக்குலத்தோர் மட்டுமின்றி பல்வேறு சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்தவர் தேவர் திருமகனார். அத்துடன், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகப் பாவித்து வாழ்ந்த அவரது பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினமான அக்டோபர் 30ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Murthy Devar ,Passover Development Corporation ,holiday ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!