×

மீனவர்கள் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் நிதியுதவி

பரமக்குடி, அக்.31:  பாம்பன் பகுதியில் இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு படிப்பு மற்றும் வாழ்கை தரத்தை உயர்ந்தும் விதமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நிதியுதவி வழங்கினார். ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பாம்பன் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை படையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவருடைய மகள் தீப்தி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டிய நிலையில் படிப்பை நிறுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இதையடுத்து நேற்று, அருள்தாஸ் மகள் தீப்தி கல்லூரி படிப்புக்கு தேவையான பணத்தினை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். மேலும் பாம்பன் ஆரோக்கியம் மகன் முகேஷ் மீன் பதனிடும் கம்பெனியில் பணியாற்றிய போது, மின்சாரம் தாக்கி இறந்தார். இவரின் குடும்பம் வறுமையில் இருப்பதாக வந்த தகவலால் நேற்று ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் நிதி பெற்று தருவதற்கு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தேரிவித்தார். நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Families ,Fishermen ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...