×

மாணவர்கள் கோரிக்கை அறந்தாங்கியில் ஊழல் தடுப்பு உறுதி மொழி ஏற்பு

அறந்தாங்கி, அக்.31: மத்திய, மாநில அரசினால் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் (அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை) கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு உறுதிமொழி மாணவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக யுனைட்டட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் அறந்தாங்கி கிளையின் நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியை வாசிக்க பள்ளி பொறுப்பு தலைமைஆசிரியர் தாமரைச்செல்வன் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவராமன் ,உதவி தலைமை ஆசிரியர் ஜெய்ஜங்கர் உட்பட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...