×

பொதுமக்கள் குற்றச்சாட்டு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 31:டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கும்பகோணத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்களின் போராட்டத்தையடுத்து தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். இதில் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகி ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Public Employees Association of Public Prosecutions ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா