×

டிஎன்பிஎல் ஆலையில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

க.பரமத்தி, அக்.31: கரூர் டிஎன்பிஎல் ஆலையில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நாட்டில் ஊழலை ஒழித்திட விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில், நாடு முழுவதும் கடந்த அக்.28ம் தேதி முதல் நவ.2ந்தேதி வரை ஊழல் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், காகிதபுரம் பேரூராட்சியில் இயங்கி வரும் டிஎன்பிஎல் ஆலையில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிறுவன செயல் இயக்குநர் (இயக்கம்) கிருஷ்ணன் தலைமையில் முதன்மை பொது மேலாளர்கள் (மனிதவளம்) பட்டாபிராமன் (உற்பத்தி) தங்கராஜூ, துணை பொது மேலாளர் (நிதி) வளனரசு, காவல் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காகித நிறுவன பணியாளர்கள் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர்.

Tags : TNPL Plant ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்