×

பூட்டியே கிடக்கும் ஏமூர் கிராமசேவை மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

கரூர், அக். 31: கரூர் மாவட்டம் ஏமூரில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் ஏமூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 13லட்சம் மதிப்பில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இந்த கட்டிடம் கடந்த சில மாதங்களாக எப்போதும் பூட்டியே நிலையில் உள்ளதாக இந்த பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டிடத்தை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில், கொசுக்கள் உற்பத்தி மையமாகவும் மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடம் புதிதாக இருந்தாலும் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, வளாகத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கட்டிடத்தின் அருகில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. எனவே, குழந்தைகளின் நலன் கருதி, கட்டிட வளாக முட்புதர்களை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Amoor Village Service Center ,
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்