×

சேலம் ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு வார விழா

சேலம், அக்.31: சேலம் ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது. சேலம் ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா, கடந்த 28ம்தேதி தொடங்கியது. இந்த விழா நவம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 28ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தலைமையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட முக்கியரயில் நிலையங்கள், பணிமனைகள் உள்ளிட்டவைகளிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊழல் உள்ளிட்டவைகளை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, கருத்தரங்கங்கள், பயணச்சீட்டு சோதனை, புகார்தாரர் குறை தீர்க்கும் முகாம், பள்ளி, கல்லூரி மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கான பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்ள நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், நேற்று ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு குறித்து நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது. இதனை கோட்ட மேலாளர் சுப்பாராவ் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம், ரயில்வே கோட்ட அலுவலகம் முதல் தொடங்கி சேலம் ரயில் நிலையம் வரை நடந்தது. இதில், கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், கோட்ட பணியாளர் நல அலுவலர் திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும், ஊழல் கண்காணிப்பு முக்கியத்துவம் குறித்து, ரயில்வே ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Tags : Salem Railway Line ,
× RELATED சேலம் ரயில்வே கோட்டத்தில் 3 ரயில்வே...