×

இடைப்பாடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

இடைப்பாடி, அக். 31:  இடைப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (1ம் தேதி) காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு செயற்பொறியாளர் செல்வம் தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில், இடைப்பாடி கோட்டத்திற்குட்பட்ட இடைப்பாடி, சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூர், கொங்கணாபுரம், கன்னந்தோரி, மகுடஞ்சாவடி, ஜலகண்டாபுரம் புறநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள், தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Intercommunity ,meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்