×

இடைப்பாடி புதன்சந்தையில் 20 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

இடைப்பாடி, அக்.31:  இடைப்பாடி புதன்சந்தையில் நேற்று 20 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது. இடைப்பாடியில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, விவசாயிகள் 50 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகள் விற்பனைக்கு வரவில்லை. சேவல் மற்றும் நாட்டுக்கோழிகள் என 1,500 விற்பனைக்கு வந்திருந்தது. சந்தையில் கேரட் ஒரு கிலோ 35 முதல் 75 வரையும், பீட்டூட் 40, முட்டைகோஸ் 20, முள்ளங்கி 25, தக்காளி 25, பெரிய வெங்காயம் 30, சின்னவெங்காயம் 30 வரையும், இஞ்சி 80க்கும், சேவல் 250 முதல் 750 வரையும், ேகாழி 100 முதல் 600 வரையும் விற்பனையானது. வழக்கமாக சந்தைக்கு 90 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். நேற்றைய சந்தைக்கு 50 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. நேற்று சந்தையில் 20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது