×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், அக். 31: தொடர் மழையால் புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்தது. நாமக்கல் மாவட்டம், புதன் சந்தையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வரும்.இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். தற்போது பரவலாக மழை பெய்து, தீவனம் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் வளர்ப்பு ஆடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில் அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளதால் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு 4,700க்கு விற்பனையானது. இந்த வாரம் 4,800க்கு விற்பனையானது. கடந்த வாரம் 4 ஆயிரத்து 800க்கு விற்பனையான வளர்ப்பு ஆடுகள் இந்தவாரம் 4 ஆயிரத்து 900க்கு விற்றது. பிறந்து ஒருமாதமேயான பெண்குட்டி ஆடு 1100 ரூபாய்க்கும், கிடாகுட்டி 1200க்கும் விற்பனையானது.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்