×

குடியிருப்புக்குள் புகுந்த ஆமை மீட்பு

திருப்பூர், அக். 31: திருப்பூரின் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று புகுந்த ஆமையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.திருப்பூர் அம்மாபாளையத்தை அடுத்த ராகவேந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 500 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக திருப்பூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வீட்டின் அருகே ஆமை ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். திருப்பூர் வனச்சரக அலுவலர் மகேஷ் அறிவுறுத்தலின் படி சரக பணியாளர் சிவமணி நேரில் சென்று ஆமையை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டார்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு