×

தொடர் மழையால் கொட்டகை சரிந்து விழுந்து மூதாட்டி பலி

தர்மபுரி, அக்.31: தொடர் மழையின் காரணமாக, தர்மபுரி அருகே கொட்டகை சரிந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம், இருமத்தூர் அடுத்த கொண்டரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமலா(65). கணவரை இழந்த இவர், கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் முருகனுக்கு திருமணமாகி, குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் கருமாத்தூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் இருமத்தூர் ஏரி அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு கொட்டகையில், நேற்று முன்தினம் இரவு விமலா தங்கியிருந்தார். கனமழையால் அவர் தங்கியிருந்த கொட்டகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த விமலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் கம்பைநல்லூர் போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தனியார் ஊழியரிடம் ₹3.23 லட்சம் மோசடி