ஓசூர், அக்.31: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 968 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 808 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 968 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அந்த தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.66 அடி தண்ணீர் உள்ளது.