×

கூடலூரில் வரி செலுத்தாத காபிக்கொட்டை பதப்படுத்தும் கட்டிடங்களுக்கு சீல்

கூடலூர், அக்.31:  கூடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் தோட்ட நிர்வாகங்களில் கடந்த 2001ம் ஆண்டு வரை செலுத்தவேண்டிய வேளாண் வருமான செலுத்தாத தோட்ட நிறுவனங்கள் மீது வருவாய்த்துறையினர் ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக  13 லட்சத்து 6 ஆயிரத்து 12 ரூபாய் பாக்கி வைத்திருந்த கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான 3 ஜீப்பகள், ஒரு கார் மற்றும் ஒரு டிராக்டர் ஆகிய 5 வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டு கூடலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதேபோல் 4 லட்சத்து 87 ஆயிரத்து 950 ரூபாய் பாக்கி வைத்திருந்த பல் மாடி பகுதியைச் சேர்ந்த தனியார் தோட்ட நிர்வாகத்தின் 3 காபிக்கொட்டை பதப்படுத்தும் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன. கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் உத்தரவின்பேரில் கூடலூர் தாசில்தார் சங்கீதா ராணி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Tags : Cuddalore ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...