×

சூளகிரியில் மின்கசிவால் ஆடு பலி

சூளகிரி, அக்.31: சூளகிரியில் ஸ்டே கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் ஆடு பலியானது. சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் வேடியப்பன்(50). இவரது மனைவி வீரம்மா(45) 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு, மாலையில் வேடியப்பன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, சூளகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வந்தபோது, தேவாலயம் அருகே இருந்த ஸ்டே கம்பியில் மின்கசிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய ஒரு ஆடு பரிதாபமாக பலியானது. சூளகிரியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மின்கம்பத்திலிருந்து ஸ்டே கம்பி வழியாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

Tags : minkazi ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா