×

கொடுமுடியில் 44 மி.மீ. மழை பொழிவு

ஈரோடு, அக். 31:  ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் காலை முதல் நேற்று நள்ளிரவு வரை லேசான சாரல் மழையுடன் விடிய விடிய பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையும், ஒரு சில இடங்களில் பரவலான மழையும் பெய்தது.இதில், கொடுமுடியில் அதிகபட்சமாக 44 மி.மீ. மழை பொழிந்துள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):- ஈரோடு-16, கோபி- 20, பெருந்துறை-23.3, பவானி-6.6, நம்பியூர்-2, சத்தி-7, மொடக்குறிச்சி-10, சென்னிமலை-2, கவுந்தப்பாடி-13.2, அம்மாபேட்டை-31.4, வரட்டுப்பள்ளம்-18, குண்டேரிப்பள்ளம்-9, கொடிவேரி-4.2.

Tags : Kodumudi ,Showers ,
× RELATED கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்...