×

ஆர்.கே.பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பரிதாப பலி

பள்ளிப்பட்டு, அக். 31:ஆர்.கே.பேட்டை அரகே வீராணத்தூர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியாகி உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சில நட்களாக பெய்து வருகிறது. ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலை பள்ளங்களில் மழைநீருடன் கழிவு நீரும் குளம்போல் தேங்கியுள்ளது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின்பேரில்  பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் தீவிர துப்புரவு, தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்தூர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் டில்லிபாபு (25). பெயின்டர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து சில நாட்களுக்கு முன் சென்னை அரசு மருத்துவமனையில் டில்லிபாபு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : RKBet ,
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே கால்நடை கிளை நிலையம் திறப்பு