×

பட்டாபிராமில் வேலியே பயிரை மேய்ந்தது: வளர்ப்பு மகள் பலாத்காரம்: துபாய் சித்தப்பாவுக்கு வலை

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராமில் வளர்ப்பு மகளை மிரட்டி சித்தப்பாவே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துபாயில் உள்ள சித்தப்பாவை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், அண்ணா நகர் 8வது தெருவை சேர்ந்தவர் வினோத் (32). துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (26). இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது ஒரு மகன் உள்ளான். தனலட்சுமி அக்கா மகள் 14 வயது சிறுமி. குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் அனாதையாக விட்டுவிட்டு சென்றுவிட்டதால் தனலட்சுமியே எடுத்து வளர்த்து வருகிறார். பட்டாபிராமில் உள்ள பள்ளியில் படித்து வந்த சிறுமி இந்த ஆண்டு முதல்  வந்தவாசியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கி அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமிக்கு அடிக்கடி வினோத் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமி எதிர்ப்பு தெரிவித்த போதெல்லாம், ‘‘இதை வெளியில் சொன்னால் உனது சித்தி மற்றும் தம்பியை கொலை செய்து விடுவேன்’’ என சிறுமியை மிரட்டியுள்ளார். இதன் பின்னர் வினோத் அடிக்கடி சிறுமியை மிரட்டியே பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் வினோத் துபாயில் வேலை கிடைத்து சென்றுவிட்டார். இதற்கிடையில் சிறுமிக்கு வினோத் எழுதி வைத்திருந்த காதல் கடிதம் சமீபத்தில் தனலட்சுமியின் கையில் சிக்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த, அவர் சிறுமியை அழைத்து கேட்டபோது, ‘‘உன்னையும், தம்பியையும் கொன்று விடுவதாக கூறி சித்தப்பா என்னை பலமுறை மிரட்டியே பலாத்காரம் செய்தார்’’ என்று கூறி அழுதுள்ளார். இதுகுறித்து தனலட்சுமி நேற்று முன்தினம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வினோத் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. எனவே போலீசார் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து துபாயில் உள்ள வினோத்தை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Valerie ,Dubai ,Siddappa ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...