×

விஷம் குடித்துவிட்டு நண்பர்களுக்கு போனில் தெரிவித்த பட்டதாரி இளைஞர்

வில்லியனூர், அக். 31: வில்லியனூர் அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து விட்டு நண்பர்களுக்கு போனில் தெரிவித்த பட்டதாரி இளைஞர், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (48), கூலி தொழிலாளி. இவரது மகன் ஆனந்தராஜ் (25). பி.காம் முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி பிறந்த நாள் என்பதால் அதை கொண்டாடுவதற்கு தனது தந்தை ஜீவரத்தினத்திடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த ஆனந்தராஜ் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து, நான் பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். வீட்டில் உள்ளவர்களிடம் இதுபற்றி கூறினர். மயங்கி கிடந்த ஆனந்தராஜை கரிக்கலாம்aபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சவுமியா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Graduate teenager ,friends ,
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...