உளுந்தூர்பேட்டை, அக். 31: ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வரன் கோயில் தெரு, பாளையப்பட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் இருந்த 15க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் மேல் பகுதியில் மூடிகள் போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியபோது பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து இடத்திலும் இது போன்ற ஆழ்துளை போர்கள் உடனடியாக மூடப்படும் என தெரிவித்தனர்.