×

நகராட்சியை கண்டித்து மீன்குஞ்சு விடும் போராட்டம்

பண்ருட்டி, அக். 31: பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியில் மழைநீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து உள்ளது. இதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சியில் மனு வழங்கினர். மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காந்திநகர் பொதுமக்களுடன் இணைந்து நகர பொதுகுழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில், நகர செயலர் உத்திராபதி முன்னிலையில் மீன்குஞ்சு விடும் போராட்டத்தை நேற்று நடத்தினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...