×

சிதம்பரம் ஜவகர் தெருவில் சாலையில் தோண்டிய பள்ளத்தை மூடாததால் விபத்து அபாயம்

சிதம்பரம், அக். 31: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை விரிவாக்க பணியால் பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இந்நிலையில் சிதம்பரம் ஜவகர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிவதற்காக நகராட்சி ஊழியர்கள் ஜவகர் தெருவில் மெகா பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது. ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறியாததால் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. தற்போது சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக வருபவர்களுக்கு இது தெரியாமல் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு