×

கலெக்டர் வேண்டுகோள் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில்

முத்துப்பேட்டை, அக்.31: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் சிதிலமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்ததாண்டபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே பெரிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. 10 லட்சம் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் தரமற்ற கட்டுமானத்தால் கட்டிய சில நாட்களிலே குடிநீர் தொட்டிக்கான தூண்களில் விரிசல் ஏற்பட்டது. அதேபோல் குடிநீர் வடிகால் வாரியமும், ஒன்றிய அலுவலகமும் போதிய பராமரிப்பு செய்யாததால் குடிநீர் டேங்க் முற்றிலும் பழுதானது. இதனையடுத்து 3 வருடங்களுக்கு முன் இந்த நீர்தேக்கதொட்டி மீண்டும் பழுதுநீக்கம் செய்யப்பட்டது. இதுவும் பெயரளவுக்கே மட்டுமே நடந்தது. இதில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் பில்லர்கள் விரிசல் ஏற்பட்டது. அதிலிருந்த சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உதிர்ந்தவாறும், உள்ளிருக்கும் இரும்பு கம்பிகளும் வெளியே தெரிந்து பில்லர்களின் இணைப்புகளும் விரிசல் கண்டதுடன், கிழக்கு கடற்கரை சாலை அருகே இந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது மேல்நிலை நீர்தேக்கதொட்டி ஆட்டம் கட்டுள்ளது. இதனால் இப்பகுதியினர் பீதியடைந்துள்ளனர்.

இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அபாயத்தை உணர்ந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திலும் அதிகாரிகள் அலட்சியமாக குடிநீரில் அரசு சுகாதார துறை பரிந்துரைக்கப்பட்டபடி குளோரின் பவுடரும் கலக்கபடுவதில்லை. இதனால் குடிநீரின் தரமும் கேள்வி குறியாகியது. அதனால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அப்புறபடுத்தி கட்டி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை.இதுகுறித்த பாதிப்பை சுட்டிக்காட்டி கடந்த மார்ச் 27ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை கண்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நேரில் பார்வைட்டு உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு முற்றிலும் இடித்து அப்பறப்படுத்த பணிகள் துரிதமாக நடந்து வந்தது. பின்னர் ஏனோ பழுதான டேங்கை உடைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்தம் எடுத்த ஆளுங்கட்சி ஒன்றிய நிர்வாகி வேளையில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பணம் வழங்கவில்லை என்றும் சம்பள பாக்கி இன்னும் 75 ஆயிரம் உள்ளதால் பணியை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் எலும்பு கூடு போன்று குடிநீர் தொட்டி நிற்கிறது. இதில் முன்பு இருந்ததைவிட தற்பொழுது பலமான கற்று வீசினால் சின்னாபின்னமாகி இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளது. எனவே இனியும் காலதாமதம் ஏற்ப்படுத்தாமல் உடன் இந்த குடிநீர் டேங்கை முழுமையாக இடித்து அகற்றிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Collector ,Udayamartandapuram ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்