×

செம்பனார்கோவில் அருகே வாய்க்காலில் மக்களுக்கு இடையூறாக மின்கம்பம்

தரங்கம்பாடி, அக்.31: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே வாய்க்காலில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பனார்கோவில் அருகே உள்ள அரங்கங்குடி ஹபீப் ரஹ்மான் சாலைக்கு அருகே ஏரிக்கலம் வாய்க்கால் உள்ளது. இளையார் பகுதிக்கு செல்லும் உயர் அழுத்த மின்சாரம் மின்கம்பம் ஒன்று வாய்க்காலின் நடுவில் உள்ளது.

இதனால் மழை வெள்ள காலங்களில் வாய்க்காலில் ஓடும் தண்ணீர் வடிவதற்கு இடையூராக இருப்பதால் தண்ணீர் அப்பகுதிகளுக்கு சென்று சூழ்ந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். மாணவ மாணவிகளும் பிரதான சாலையிலிருந்து வீடுகளுக்கு இவ்வழியே வரும்போது தண்ணீரில் நடந்து வர வேண்டியுள்ளது. எனவே வாய்க்காலில் அமைந்துள்ள மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sembanarko ,
× RELATED செம்பனார்கோவில் வட்டாரத்தில் காய்கறிகள் பயிரிட தோட்டக்கலை அழைப்பு