நாகை, அக்.31:நாகூர் அருகே பாலக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகள் சாய்(1). இவர் கடந்த 28ம் தேதி வீட்டின் முன்புறம் உள்ள வாசலில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த தாமரைகுளத்தில் தவறி விழுந்தாள். உடனே சாய்யை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தாள். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.