×

ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் சிசிடிவி அமைப்பு பொதுமக்களுக்கு போலீசார் பாராட்டு

ராஜபாளையம், அக். 27:  ராஜபாளையத்தில் முத்து கொத்தனார் தெரு உள்ளது. இப்பகுதியில் குற்றச்செயல்களை கண்காணிக்க, பொதுமக்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையை ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கரன் திறந்து வைத்தார். விழாவில் தெற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன்,  போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ராஜபாளையம் டிஎஸ்பி கூறுகையில், ‘இப்பகுதியில் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து, சிசிடிவி அமைத்திருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்க, கண்காணிப்பு கேமராவை பொதுமக்கள் அமைக்க வெண்டும். நகர் பகுதியில் பொதுமக்களுக்கு எந்த குறை இருந்தாலும் போலீசாரிடம் தெரிவிக்கலாம். கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் கூட்டத்தில் குறைகளை எடுத்துரைக்க வசதியாக இருக்கும்’என தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட போலீசாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Rajapalayam ,area ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...