×

காவிரி டெல்டாவில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார்குடி, அக். 27: காவிரி டெல்டாவில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுப் பணித் துறையில் செயற் பொறியாளர் கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளதால் பொதுப்பணித்துறையின் அனைத்துப் பணிகளும் முடங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக காவிரி டெல்டாவில் தண்ணீரை பகிர்ந்தளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மேட்டூர் அணை உட்பட அனைத்து ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உள்ளது.உபரி நீர் கொள்ளிடம் வழியே அவ்வப்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. வடிகால் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு நடப்பாண்டு அனுமதிக்கப்படாததாலும் மழை நீர் வடியாமல் வயல் வெளிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் சாகுபடி பணிகளை முழுமையாக தொடர முடியாமல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உபரி நீரை வெளியேற்றுவதற்கும், தேவைக்கேற்ப பகிர்ந்தளிப்பதற்கும் முடியவில்லை.இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்று படுகைகளிலும், விளை நிலப்பகுதிகளிலும் மணல் கொள்ளை தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தாவிடில் டெல்டா மாவட்டங்கள் அழியும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியாளர்களும் நியமிக்காததால் பாசன வடிகால்கள் அழியும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும். பொதுப்பணித் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் கொண்ட குழுக்கள் கிராமங்கள் தோறும் உருவாக்கி காண்காணித்து பாதுகாக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மணல் கொள்ளையர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மணல் கொள்ளையை தடுக்க கிராமங்கள் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். உயர் நீதிமன்றம் தானே வழக்கு பதிவு செய்து மணல் கொள்ளைக்கு எதிராக கடு மையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும், உடனடியாக பொதுப் பணித்துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு அவசரக்கால நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும். பாசனத்திற்க்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்.தற்போது 3வது முறையாக நிரம்பியுள்ள நிலையில் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் 100 அடி அளவிலான தண்ணீரை மேட்டூரில் இருப்பு வைப்பதற்கான நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டு (2020) ஜூன் 12ல் தண்ணீரை திறந்து குறுவை சாகுபடியை மேற்க்கொள்ள முடியும். இதனை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை தற்போதிலிருந்தே துவங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Tags : Cauvery Delta ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை