×

மன்னார்குடி அருகே மரத்தில் பைக் மோதி கணவன் பரிதாப பலி, மனைவி படுகாயம் மகளுக்கு தீபாவளி சீர் கொடுத்து திரும்பியபோது விபத்து

மன்னார்குடி, அக். 27: மன்னார்குடி அருகே மகளுக்கு தீபாவளி சீர் கொடுத்து திரும்பியபோது மரத்தில் பைக் மோதி கணவன் பரிதாபமாக இறந்தார். மனைவி படுகாயமடைந்தார். தஞ்சை மாவட்டம் பூதலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்(54). இவரது மனைவி காமாட்சி(40). ராஜேந்திரன் ெவளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் தீபாவளி கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்தார். இவர்களது மகள் திலகவதியை மன்னார்குடி அடுத்த வடபாதிமங்கலத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

அவருக்கு தீபாவளி சீர் கொடுப்பதற்காக நேற்று ராஜேந்திரனும், காமாட்சியும் வடபாதிமங்கலம் சென்றனர். பின்னர் பைக்கில் பூதலூர் திரும்பி கொண்டிருந்தனர். வடுவூர் அடுத்த ராணித்தோப்பு என்ற இடத்தில் ரோட்டோர பனை மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தம்பதி இருவரும் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். காமாட்சி மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடுவூர் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Accident ,Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...