×

நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளதா? கொள்ளிடம் ஆற்றங்கரையில் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு

கொள்ளிடம், அக்.27: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் அளக்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கான்கீரீட் சுவர், கடந்த வருடம் ஆற்றில் அதிக அதிக தண்ணீர் வரத்தின் போது 100 மீட்டர் தூரத்திற்கு இடிந்து தண்ணீருக்குள் விழுந்தது. இதில் ஆற்றின் கரை உடைந்தது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடவடிக்கையால் உடைப்பு தற்காலிகமாக அடைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடைப்பு நிரந்தரமாக அடைக்கப்படவில்லை.
இந்நிலையில் பருவமழை துவங்கியதையொட்டி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் கரை உடையாமல் கரையை பலப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் அளக்குடிக்கு வந்து ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், அரசிடம் இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் கலெக்டர் பிரவீன்நாயர் அளக்குடியில் உள்ள புயல் மற்றும் வெள்ளபாதுகாப்பு மையம், தற்காஸ் கிராமத்தில் கிட்டியணை உப்பானாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை நீர் ஆற்றில் அதிகம் வந்தால் எளிதில் வடிய வைக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். சீர்காழி தாசில்தார் சாந்தி, ஒன்றிய ஆணையர் சரவணன், பிடிஓ ஜான்சன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் விவேகானந்தன், முத்துமணி, ஒன்றிய பொறியாளர் பிரதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Collector Inspection ,Kolli River ,
× RELATED சிவகாசியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு