பெரம்பலூர், அக்.27: பெரம்ப லூர் அருகே இளம்பெண் ணைக் கடத்திய பொக்லின் டிரைவரை பெரம்ப லூர் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கவுண்டனூரைச் சேர்ந்தவர் நாரா யணன் மகன் ரத்தினவேல் (25). இவர், பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் தங்கி பொக்லின் வாகன டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் 17 வயது சிறுமியை ரத்தினவேல் காதலித்து கடத்திச் சென்ற தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரத்தின வேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.