×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சேதுபாவாசத்திரம், அக்.27: தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர்கள் கடலுக்கு செல்லவில்லை. சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள கொள்ளுக்காடு, புதுப்பட்டிணம், மல்லிப்பட்டிணம், சின்னமனை, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைப்பட்டிணம், அடைக்கத்தேவன், மந்திரிப்பட்டிணம், அண்ணா நகர் புதுத்தெரு,சோமநாதன்பட்டிணம், கணேசபுரம், செம்பியன்மாதேவிபட்டிணம் உள்பட 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 134 விசைப்படகுகளும் உள்ளன. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இன்று நடைபெறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : fishermen ,sea ,Diwali ,occasion ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...