×

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவோம்

கிருஷ்ணகிரி, அக்.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லா இனிய தீபாவளியாக கொண்டாடுவோம் என எஸ்.பி. பண்டிகங்காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பெற்றோர்கள் அருகிலிருந்து கண்காணித்து கொள்ள வேண்டும். தீபாவளியை முன்னிட்டு கடைவீதி, பஸ் நிலையம் மற்றும் மால் போன்ற இடங்களில் அதிகளவில் ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பாடாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் விரைந்து செல்ல காவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த தீபாவளி பண்டிகையினை, எந்த குற்றமும், விபத்தும் ஏற்படாத இனியதொரு தீபாவளியாக கொண்டாடுவோம். மேலும் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எஸ்.பி பண்டிகங்காதர் தெரிவித்துள்ளார்.

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...