×

அனுமதியின்றி பட்டாசு விற்பனை 4 கடை உரிமையாளர் மீது வழக்கு

தர்மபுரி, அக்.27: தர்மபுரியில் தீபாவளியையொட்டி, அனுமதியில்லாமல் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு கடையில் அனுமதியில்லாமல் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், நேதாஜி பைபாஸ் சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கடையின் உரிமையாளர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயில், பாப்பிரெட்டிப்பட்டி மோளையனூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அதன் கடையின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கடைகளில் இருந்த பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், காரிமங்கலம் பகுதியில் அனுமதியின்றி டீசல் விற்று கொண்டிருந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags : Shop Owner ,
× RELATED மகளுக்காக சேமித்த ரூ5 லட்சத்தில்...