
நாசரேத், அக். 27: திருமறையூரில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தின விழா நடந்தது.நாசரேத் அடுத்த திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் வைகுண்டம் வட்டார சட்டப்பணிகள் குழு சார்பில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தின விழா நடந்தது. இதில் வக்கீல் ராம்கோகிலா, வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் இசக்கியம்மாள் மற்றும் சாந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று மனவளர்ச்சி குன்றியோரின் தேவைகளை கேட்டறிந்து உதவிகள் வழங்கினர்.