×

கயத்தாரில் தமிழக ஆசிரியர் கூட்டணி கொடியேற்று விழா

கயத்தாறு, அக். 27:கயத்தாறில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் 37வது ஆண்டு துவக்க விழாவையொட்டி சங்க கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் 37 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கயத்தாறு வட்டார கல்வி அலுவலகம் முன்பு சங்க கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. வட்டார தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கயத்தார் வட்டாரச் செயலாளர் பொன்மணி வரவேற்றார். கோவில்பட்டி கல்வி மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா கொடி ஏற்றினார்.  வட்டார தணிக்கை குழு உறுப்பினர் பூல் பாண்டியன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .விழாவில் மாவட்டத் துணைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி புகழுடையார், தேவசீலன், செயற்குழு உறுப்பினர் ஜோஸ்வா,அருள், துரை, சிங்காரவேலன், ராணி, ரேவதி, கீதாலட்சுமி, முருகலட்சுமி,  சாந்தி, தீபா,  பேச்சியம்மாள், ஜெயக்குமாரி, பேச்சியம்மாள், கோயில் அருள் ரோஸ், தங்கம்மாள், ஜமுனாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் வட்டாரச் செயலாளர் சுடலைமுத்து நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu Teachers Alliance Flag Day Ceremony ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு