×

லாரி மோதி இளம்பெண் பலி

அம்பை, அக். 27: கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் ஊராட்சி காமராஜர்புரத்தைச் சேர்ந்த செல்வம் மகள் ஜெசி(19). திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பூதத்தான் மகன் சிவனுபாண்டி (30) என்பவருடன் தீபாவளி பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து கல்லிடைக்குறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பொட்டல்- கரம்பை சாலையில் செல்லும் போது முன்னாள் சென்ற லாரியை சிவனுபாண்டி முந்த முற்பட்டார். அப்போது எதிரே வந்த பைக், சிவனுபாண்டி பைக் மீது மோதியது. இதில் ைபக் நிலைதடுமாறிய  சிவனுபாண்டி, பின்னால் அமர்ந்திருந்த ஜெசி ரோட்டில் விழுந்தனர். இதில் ஜெசியின் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறியதில் மூளை சிதறி சம்பவ இடத்தில் பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிவனுபாண்டி நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அங்கயற்கரசி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Larry ,teenager ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி