×

வீரவநல்லூரில் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்

வீரவநல்லூர், அக்.27: வீரவநல்லூர் தனியார் தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு சப்-கலெக்டர் பிரதிக் தயாள் தீபாவளி புத்தாடை வழங்கினார். வீரவநல்லூரிலிருந்து ரெட்டியார்புரம் செல்லும் வழியில் ஆதரவற்ற நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட வயோதீக பெண்களை பராமரிக்கும் தனியார் தொன்டு நிறுவனம் உள்ளது. இக்காப்பகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட முதியோர்கள் உள்ளனர். இவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நேற்று சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதிக் தயாள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் தாசில்தார் சந்திரன், மண்டல துணை தாசில்தார் வள்ளிநாயகம், தலைமையிடத்து துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் ஹமீதாபேகம், வி.ஏ.ஒ பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Diwali ,Veeravanallur ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது