×

வாசுதேவநல்லூரில் கூடுதல் விலைக்கு விற்க மதுபானம் பதுக்கியவர் கைது

புளியங்குடி, அக்.27: வாசுதேவநல்லூரில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கூடலூர் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ஹலோ போலீஸ் தொலை பேசி எண்ணிற்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து வாசுதேவநல்லூர் எஸ்ஐ சண்முகவேல், ஏட்டு பாலசுப்பிரமணியன், போலீசார் கலைபாண்டியன் ஆகியோர் கூடலூர் பகுதிக்கு சென்று சோதனை செய்த போது அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கூடலூரை சேர்ந்த காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோமதியை இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Vasudevanallur ,
× RELATED வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி...