×

போக்குவரத்து விதி மீறிய 47 பேர் மீது வழக்கு பதிவு

உளுந்தூர்பேட்டை, அக். 27:  உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி, போக்குவரத்து ஆய்வாளர் அப்பாண்டைராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், குருபரன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையிலும், உரிய ஆவணங்கள் இன்றியும், லைசென்ஸ் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கரம் மற்றும் கனரக வாகனங்களை ஓட்டிச்சென்ற 47 வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 5 வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ்கள் ரத்து செய்ய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...