×

உயர்மின்கோபுர பராமரிப்பு பணியில் மின்சாரம் தாக்கி ஜார்க்கண்ட் வாலிபர் சாவு

வில்லியனூர், அக். 27:  வில்லியனூர் அருகே உயர்மின்அழுத்த கோபுர பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். வில்லியனூர் அடுத்த கணுவாப்பேட்டை பகுதியில் உயர் மின்அழுத்த கோபுர பராமரிப்பு பணிகள் நடந்தது. இப்பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சியாலிலால் (20) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கோபுரம் அருகில் இருந்த செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளிட்ட அடர்ந்த புதர்களை அகற்றியபோது, திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, உடனிருந்தவர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரர் பகவத், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்ேபரில் காண்ட்ராக்டர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் முத்துக்குமார், பணி மேற்பார்வையாளர் ஜபாசிங் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Jharkhand ,electrocution ,maintenance tower ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...